அழகற்ற கவிதை

அழகற்ற கவிதை

அன்பின் வழியே அறம் காக்க
பயணப்படும் என் கவிதை

ஆணவம் அழித்து அகம் நோக்கி
பாதையமைக்கும் என் கவிதை

இருளை கிழித்து ஒளிக் கீற்றை
தேடியலையும் என் கவிதை

ஈரம் வழியும் மன பிம்பங்களின்
வேரைத்தேடும் என் கவிதை

உறவுகள் ஒழித்த பிரிவின் வேதனைகளை
பின்தொடரும் என் கவிதை

ஊடலில் கழித்த உறவுகள் தழைக்கும்
காரணம்தேடும் என் கவிதை

எழில் கொழிக்கும் இயற்கை பெருவெளியில்
உயிர்பொருளைதேடும் என் கவிதை

ஏழை உழவனின் எளிய வாழ்வை
வியந்துநோக்கும் என் கவிதை

ஐம்புலன்கள் விழித்து வியக்கும் காதல்
கனவுகாணும் என் கவிதை

ஒழுக்கத்தின் வழியே நடக்கும் நல்உயிர்கள்
வணங்கிநிற்கும் என் கவிதை

ஓர்உயிரின் வலியை உலகுக்கெல்லாம் உணர்த்த
கவிதையாகும் என் கவிதை

ஓளடதமாகி அழிக்கும் ஆன்மாவின் வலியை
அன்பில்விளைந்த என் கவிதை

எப்பொழுதுமே மெய்யை தேடும்
என் கவிதை

கவிதைக்கு பொய்யழகு எனில்

அழகற்றதாகவே இருக்கட்டும்
என் கவிதை

எழுதியவர் : சூரியகாந்தி (17-Apr-16, 2:03 am)
பார்வை : 182

மேலே