துயர் அதனைப் பகிர்ந்துகொள்ள - - - - - சக்கரைவாசன்
துயர் அதனைப் பகிர்ந்துகொள்ள
*******************************************************************
தனக்குறும் துயரை எல்லாம் தனிமையில் எடுத்துக் கூறி
கனக்குமுட் சுமையைக் கண்ணீர் கழுவிட அழுதற்க் கேற்ப
மனக்கரு அறையில் வைத்து துயரதனைப் பகிர்ந்து கொள்ள
எனக்கொரு தெய்வம் தேவை என்றுநான் சிவனைப் பெற்றேன் !