வல்லமை உடையேன் யானோ - - - - சக்கரைவாசன்
வல்லமை உடையேன் யானோ ?
**********************************************************
பிணத்துயிர் வாழ்வின் உள்ளப் பிணியினை காதல் என்று
குனக்கதை பேசும் நான் என் கொள்கைகட் கேற்ற ஒன்றை
இணக்கமாய்ப் படைத்து தெய்வம் எனப்பெயர் இட்டுக் கொண்டு
வணக்கமும் செலுத்தற்கு ஏற்ப வல்லமை உடையோன் யானோ ?
( யானறியேன் பராபரமே )