பூவின் பதில்

பூவின் பதில்.
*
ஒன்றுமே செய்ய முடியவில்லை
என்னால் அந்தப் பூவை
கடந்து போனாலும் – அதன்மீது
நடந்துப் போனாலும்
கசக்கிப் போட்டாலும்
நசுக்கிப் போட்டாலும்
பறித்துப் எறிந்தாலும்
முகர்ந்து பார்த்தாலும்
மென்று பார்த்தாலும்
மன்னித்து விடுகிறது அந்தப்பூ
தாயைப் போல
தாய்மையும் பூமையும்
ஒன்றுதான் போலும்
என்னதான செய்யினும்
அதன் ஒரே பதில்
நெஞ்சம் நிறைக்கும் நறுமணம்!
நாகூர் ரூமி – சிற்றகல் –கெவிதைத் தொகுப்பு – பக்கம் – 142
தகவல் : ந.க.துறைவன். 24-04-2016.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (24-Apr-16, 12:10 pm)
Tanglish : poovin pathil
பார்வை : 184

மேலே