காதல் ஊர்கோலம்

உன் நெஞ்சில் காதலின் ஊர்கோலம் நித்தம் நான் காண்கிறேன்
கண்ணா உன் விழியோடு நான் பேசவா
என் மோக முகம் கொண்டு
உன் நெஞ்சோடு நான் பாடவா
காதலின் அதிசயம்
என் இதயத்தில் காதல் ஒவியமோ
இயற்கையின் காதலில் இறைவனும் சாட்சியோ
நம் வாழ்வென்ற உறவினில் காதலே சாட்சி தான்
வாழ்கையின் வசந்தங்கள் சுகமாகுமோ
காதலின் கோலங்கள் வாழ்வாகுமோ

எழுதியவர் : சௌம்யா செல்வம் (25-Apr-16, 7:40 am)
Tanglish : kaadhal oorkolam
பார்வை : 67

மேலே