உடல் தானம்

யார் சொன்னது?---
ஆன்மாதான் அழியாதது என்று;
உடல் அழிவது என்று!
ஆன்மா அழியாததுதான்; சற்றும் ஐயமில்லை!
ஆனால் ---
உடலும் அழியாததுதான்! --- எப்போது?
உடல் உறுப்புகள் அனைத்தும் -- ஒருவர்
இறப்பின்போது
தானம் தர சம்மதித்தால்!
உறுப்புகள்தானே
உடலுக்கு
அர்த்தத்தையே அளிக்கின்றன!
அவை
ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் உடல்களில்
உயிர்ப்புடன் அன்றோ வாழ்கின்றன!
என்னே உடல்தானத்தின் மகிமை!

எழுதியவர் : ம கைலாஸ் (25-Apr-16, 11:54 am)
பார்வை : 536

மேலே