சும்மா தூள் பறக்கிறது

வேட்பாளர்கள் சொல்லும்
இனிய வார்த்தைகள்
காது குளிர்கின்றது
கேட்கும் போது மனமும்
இலேசாகின்றது
ஆனால் எல்லாம் எப்படி
நடைமுறைக்கு வருமா /
ஏதோ மனதில் ஐயப்பாடு
இருந்து கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு தேர்தலிலும்
வாக்களித்து வாக்களித்து
திருப்தியற்ற நிலையில் மக்கள்
எந்த வேட்பாளர் பிரச்சாரம் நடத்தும் போதும்
கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது
அவ்வளவு உறுதியான வார்த்தைகள்
ஆக்கபூர்வமான செயல்கள் பற்றி
ஆணித்தரமாக கூறும் வேட்பாளர்களின்
நம்பிக்கையில் நம்மை எல்லாம்
தங்கள் கைக்குள் அடக்கி விடுகிறார்கள்,
ஒவ்வொரு வாக்காளர் பேச்சைக் கேட்கும்போதும்
அவர்களுக்கே நமது வோட்டு
என்று சொல்ல வேண்டும் போல்
மனசில் தோன்றி விடும்
இதே எண்ணம் நம்மை தேர்தல் வரைக்கும்
இழுத்து சென்று விடும்
ஆனால் அன்று நம் மனதில் யாருக்கு
இடம் கொடுக்கிறதோ இப்போ சொல்லிட முடியாது
ஏன் என்றால் எல்லோர் பிரச்சாரமும்
சும்மா தூள் பறக்கிறது
பொறுத்திருந்துதான் பார்போம்
என்னதான் நடக்கட்டுமே
இந்தத் தேர்தலில் நீதி விளங்கட்டுமே ,

எழுதியவர் : பாத்திமாமலர் (25-Apr-16, 9:43 pm)
பார்வை : 66

மேலே