நிழல்கள்

கண்களில் நீர்
கண்ணாடியில்

*****==*****

நீரின் வடிவம்
பாத்திரத்தில்
நிறம்
சங்கமத்தில்

*****==*****

உடல் நனைகிறது
வியர்வை மழையினால்
உயிர் நனைகிறது
கோபம் அன்பினால்
*****==*****

மூங்கிலில்
பூச்சரிப்பு
புல்லாங்குழலின்
விரைவிற்காக

*****==*****

பாதைகள் நிற்பதில்லை
நாம் தான் பாதையில் நிற்கிறோம்
பாதையை முடிக்கிறோம்

*****==*****

அழகு நிலவிற்கும்
அமாவாசை உண்டு
உன் வாழ்வில் சோகம்
என்றால்
அதை முதலில்
ஆறபோடு

*****==*****



*****~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Apr-16, 8:35 pm)
Tanglish : nizhalkal
பார்வை : 95

மேலே