நிழல்கள்
கண்களில் நீர்
கண்ணாடியில்
*****==*****
நீரின் வடிவம்
பாத்திரத்தில்
நிறம்
சங்கமத்தில்
*****==*****
உடல் நனைகிறது
வியர்வை மழையினால்
உயிர் நனைகிறது
கோபம் அன்பினால்
*****==*****
மூங்கிலில்
பூச்சரிப்பு
புல்லாங்குழலின்
விரைவிற்காக
*****==*****
பாதைகள் நிற்பதில்லை
நாம் தான் பாதையில் நிற்கிறோம்
பாதையை முடிக்கிறோம்
*****==*****
அழகு நிலவிற்கும்
அமாவாசை உண்டு
உன் வாழ்வில் சோகம்
என்றால்
அதை முதலில்
ஆறபோடு
*****==*****
*****~பிரபாவதி வீரமுத்து