நீரின்றி அமையாது உலகு வாரும் வள்ளுவரே

வாரும் வள்ளுவரே
நீரின்றி அமையாது உலகு என்றீர்கள்
உண்மைதான் - இந்த
வார்த்தையை நீங்கள்
வாக்கியமாய் அமைத்து விட்டீர்
வாய்மொழியாய் தொடுத்து விட்டீர்

நீர் பிரபஞ்சத்தில் - ஒரு
நிகரில்லா பொருள்
நீர் உலகில் - ஒரு
உண்ணதமான பொருள்
நீர் உயிர்கள் வாழ்ந்திட - ஒரு
உயிரோட்டமுள்ள பொருள்

நீரின்றி அமையாது உலகு
நிதர்சனமான உண்மைதான்
நீயின்றி அமையாது அமையாது உயிர் - என்று
நித்தமும் மங்கை பின் அலைபவரே
மங்கை பெயர்கொண்ட
கங்கை, காவிரி, யமுனா
இவைகளின் வளர்சியை
நினைத்து முயன்றிருந்தால்
நாடு வளம்பெரும் இளைஞர்களே

நீரின்றி அமையாது உலகு
நீரில்லையேல் இயங்காது உயிர்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (1-May-16, 8:05 am)
பார்வை : 299

மேலே