ஊடல்
நாம்
உரையாடிக்கொண்டு இருந்தோம்,
மௌனமாய்..!!
*
இருட்டறையில்
'என்ன தேடினோம்?'
ஒளிந்து கொண்ட நம்
நிழல்களைதானே..
*
சிரித்து தொலைக்காதே, கள்ளி..!!
முத்துகள் ஒளி வீசுமாம்..
*
எத்தனை எத்தனை
ரகசியங்கள் உடைந்ததோ,
சாவி துவாரத்தின் வழியே..!
இருட்டிற்குதான் வெளிச்சம்..
*
மூடபட்டு இருந்தது..
அறையின் கதவுகள் மட்டும்தான்..!