கடமை
'இங்கே மிதியடிகளை விடவும்'
என்ற கோவிலின் அறிவிப்பு பலகையின்
கீழே மிதியடிகளை விட போன என்னை,
'உள்ள சந்நிதிகிட்டவே விடலாம் வாங்க'
என்றழைத்து சென்றாள்,என் துணைவி..
சந்நிதி அருகே,விட்டுவிட்டு பிரகாரத்தில்
கும்பிட போன நான்,
கடவுளை காணாது திகைத்தேன்..
சந்நதிக்கு வெளியே,
மிதியடிகளை காவல் காத்துகொண்டிருந்தார்,
கடவுள்.