ம்

பிடிச்சிருக்கா..?
ம்
கல்யாணம் பண்ணிப்பமா..?
ம்
விளக்கை அணைச்சிருட்டுமா..?
ம்
உன் மௌனம் என்னை கொன்றுவிடாது
என்னை காத்து நின்ற ஒரு சொல்..!
'ம்' தானே..
'ம்' இல்லாது காதலுண்டா..?
'ம்' இல்லாது காமமுண்டா..?
'ம்' இல்லாது பிறப்புண்டா..?
உன் தாபமும் ஒரு 'ம்'
உன் கோபமும் ஒரு 'ம்'
உன் தேடலும் ஒரு 'ம்'
உன் தேவையும் ஒரு 'ம்'
எம்மொழியும் சேரும் 'ம்'மும்
ஒரு தனிமொழிதானே..!!
உனக்கும் எனக்குமான ஒரு புதுமொழி..!!
'நம்மில்' 'ம்' இல்லாது பொருளில்லை..
'ம்' இல்லாது 'நாம்' பிறப்பதில்லை..
உன்னிடமிருந்து ஒரு 'ம்' வேண்டி,
இதை எழுதி கவிதைதானே ,என்று வினவுகிறேன்..
சொல் ,அழகே..!!
இதுவும் ஒரு கவிதைதானே..?!

எழுதியவர் : கல்கிஷ் (8-May-16, 11:29 am)
Tanglish : m
பார்வை : 297

மேலே