எங்கு சென்றாய் என் அம்மா

ஈன்றவள் என்னைப் பிரிந்து
ஈராண்டு நிறைவு இன்று
நோய் எனக்கு வந்துவிட்டால்
தாயே பதறிவிடும் உன் உள்ளம்
மூலிகை மருந்தரைத்து – எனக்கு
மூவேளை கொடுத்திடுவாய்
உறங்கும் வரை காத்திருந்து
என் உடலை அமுக்கிவிடுவாய்
அன்று வறுமையின் பிடியிலே
துயரத்தை சுமந்து உழைத்தாய்
நீ விதைத்து வளர்த்த என் இனிய
வாழ்வின் அறுவடையை பகிராமல்
எங்கு சென்றாய் என் அம்மா!

எழுதியவர் : மோகனதாஸ் (8-May-16, 8:49 pm)
பார்வை : 162

மேலே