குழந்தைத் தொழிலாளர்கள்

1. மழலையில் ஓகை களிப்பை கலைத்து
மழவோரை நிர்வாகக் கூலியாய் ஆத்தல்
பிழைசூழ வாழ்வே அமைக்கும் – அழற்கும்
இழைசூளான் மாழாத்தல் உண்டு.

2. வருவாயைத் துங்க இடுமுதல் தும்ப
தருவாயில் ஈட்டம் குறைத்தும் பயக்க
பெருந்தொய் படிப்பேறா பாங்கே பணிக்கு
நிருமித்தல் பிள்ளை எனில்.

3. சட்டதிட்டம் காப்ப எதிர்கால் உளங்கொள
குட்டரைதாம் சேர்க்கார் நிறுவனத் தாரெனில்
சிட்டாகும் பிள்ளைகள் வேலைப் பெரியார்க்கே
கட்டாயம் கல்வி அவைக்கு.

எழுதியவர் : விஜயலட்சுமி R (9-May-16, 10:42 pm)
பார்வை : 61

மேலே