போடி பைத்தியக்காரி உங்கூடவே தான இருக்கன்

நீ இல்லை எனில்
நானும்
பிச்சைக்காரி தான்
உன் அன்பை தேடி
தெரு தெருவாய் சுற்றுவேன்

நீ இல்லை எனில்
நானும் பைத்தியக்காரி
தான்
உன்னை தேடி
என்னை மறந்து
யாவையும் தொலைத்து
அலைந்து திரிவேன்

நீ இல்லை எனில்
நானும் பேய் பிடித்தவள்
தான்
உலகத்தை இழந்து
எனக்குள்ளேயே
பேசிக்கொள்வேன்
சிரித்துக்கொள்வேன்

நீ இல்லை எனில்
நானும் தான் இல்லை

~ பிரபாவதி வீரமுத்து

==++==++==++==++==++==

மனதை இழந்து விட்ட நான்
மனநிலை பாதிக்கப்பட்டவளாம்

நான் இன்னும்
உயிரோடு தான்
இருக்கிறேனாம்
மருத்துவன்
சொல்கிறான்

மருந்து
எடுத்துக்கொண்டால்
பிழைத்துக்
கொள்வேனாம்
அதுவும் சரிதான்
மருந்தை தான்
தவறிவிட்டேனே!

விழலுக்கு இரைத்த நீர்
இவர்கள் தரும் மருந்து
நீங்கள் தரும் தரிசனத்திலேயே
உயிர் பற்றி எரியும்
உயிர் முக்தி அடையும்

மண்ணை ஊட்டிவிடுகிறார்கள்
பாலை வார்க்கிறார்கள்
யாவரும் மறந்துவிட்டார்களா
உங்களை அழைத்து
வந்து
என் கைகளை ஸ்பரிசிக்க வைக்க


ஏதோ சுவாசக்குழாய் எல்லாம்
பொருத்தி வைத்துள்ளார்கள்
பேச முடியவில்லை
விலக்குங்கள்
ஒரு வார்த்தை
' என்னங்க ' அழைக்கிறேன்
ஒரு முத்தம்
தந்து விட்டு செல்கிறேன்

கையில்
தெம்பூட்டும்
ஊட்டச்சத்து மருந்துகள்
ஏறுகின்றன
அதெல்லாம்
எனக்கெதற்கு
நீங்கள்
வந்து
என் கைகளை
பிடித்தால்
பல ஆயிரம்
ஆயிரம்
மின்னல்கள்
என்னில் எழும்பும்(எழும்பாதா)


உங்களுக்கும்
கடவுளுக்கும் தான்
தெரியும்
என் தவிப்பு
சீக்கிரம் என்னை
ஏற்றுக்கொள்ளுங்கள்


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-May-16, 8:27 am)
பார்வை : 236

மேலே