தூரம் இன்று சுகமாகிறது
உன் தூரம் கூட
எனக்கு இன்று
சந்தோஷத்தை
தருகிறது
ஆம்
நீ நின்று கொண்டிருக்கிறாய்
நான் உன்
காலடியில்
வீழ்ந்து கிடக்கிறேன்
இன்னும்
கொஞ்ச நேரத்தில்
என்னை தொட்டு தூக்குவாய்
என்ற மகிழ்ச்சியில்...
கண்மூடுகிறேன்...
~ பிரபாவதி வீரமுத்து