கனவுகளே கனவுகளே

கனவுகளே கனவுகளே
உறக்கம் கலைப்பது ஏன் ???
விடியல் வரும் வெற்றி வரும்
என்று கலைந்தாயோ ???

உறங்கிட செய்வதல்ல கனவு
உறங்காமல் செய்வதே கனவு
என்று கலாம் சொன்னதை
நினைவூட்ட கலைந்தாயோ ???

உன்ன உணவு உடுத்த உடை
இருக்க இடம் கழிக்க பணம்
என்பதல்ல வாழ்க்கை
என்று சொல்ல கலைந்தாயோ ???

கனவுகளே கனவுகளே
தினம் கலைய வேண்டுகிறேன்

எழுதியவர் : ருத்ரன் (23-May-16, 7:47 pm)
பார்வை : 120

மேலே