நெற்றி வடு

நெற்றிவடு…!!
*
திங்கட்கிழமை விநாயகருக்கு
வாழைப்பழத்தில் விளக்கேற்றினாள்.
செவ்வாய்கிழமை துர்க்கைக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றினாள்.
புதன்கிழமை விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சி
துளசிமாடத்தில் விளக்கேற்றினாள்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு
தேங்காயில் விளக்கேற்றினாள்
வெள்ளிக்கிழமை காமாட்சிக்கு
பொங்கல் வச்சி மாவிளக்கேற்றினாள்.
சனிக்கிழமை கிரகத் தோஷம் நீங்கிட
சனிபகவானுக்கு எள் விளக்கேற்றினாள்.
ஞாயிற்றுக்கிழமை காலபைரவருக்கு
உச்சிவேளைப் பூசையில் விளக்கேற்றினாள்.
எல்லா நாளும் பக்தியோடு வழிப்பட்டவளுக்கு
நல்ல வரன் அமையவில்லை.
புகுந்த வீட்டிற்குப் போய் விளக்கேற்றும்
பாக்கியம் இன்னும் கிட்டவில்லை - இன்னும்
பகவான்கள் யாரும் கண் திறக்கவில்லை்.
நெற்றிவடு வலப்புறமாய் கருமுடிகள் ஒன்றிரண்டு
வெள்ளி கம்பியாய் தகதகத்து மின்னுகிறது.
ந.க.துறைவன்
*

எழுதியவர் : ந.க.துறைவன் (24-May-16, 6:16 am)
பார்வை : 136

மேலே