கவிதையே

கவிதையே...
எனக்காக இந்த உலகத்தில்
பிறந்தாய் பின்பு
ஏன் நீ என்னை விட்டு
பிரிந்தாய்..

எனக்கும் வேண்டும்
உன் கற்பனை
உலகம்..
கனவுக்கும் முகவரி
கொடுக்கின்ற
மென்மையான இதயம்...

கவிதையே...
உன்னை போல் வார்த்தைகளால்
வாழ ஆசைபடுகிறேன்..
உன் வாழ்க்கை
கொஞ்சம் கொடு சில
நாட்கள் உன் போல்
வாழ்ந்து விட்டு
இறக்கின்றேன்...

இருளுக்கு துணையாய்
ஒளி போல
இரவுக்கு துணையாய்
நிலவை போல
எனக்கு துணையாய்
நீ வேண்டும்
என் நிழலை போல் இருக்க
வேண்டும்..

கண்களின் சோக
கவிதையே
கண்ணீர்..
உதடுகளின் சந்தோஷ
கவிதையே புன்னகை..

வார்த்தைகளில் இருந்து
மலர்ந்த இந்த
கவிதை பூக்கள்
எனக்கு எனக்கு வாழ்த்து மடல்
ஆகின்றன..என்
வாழ்க்கைக்கு
உயிர் கொடுக்கின்றன..

வார்த்தைகளில் இருந்து
வந்தவர்களே
நீங்கள் என் சொந்தங்கள்
உங்கள் வாழ்த்து
மடல் இல்லையேல்
சிலர் வாழ்க்கையில்
மறையாது சோகத்தின் கீதங்கள்...

எழுதியவர் : சபானா ஆஷிக் (29-May-16, 7:35 pm)
Tanglish : kavithaiye
பார்வை : 76

மேலே