கடவுள்

நாங்கள் பறித்து தொடுத்த மலர்களைதான்
மாலையாக மாரில் சூடியிருக்கிறான்

நாங்கள் அறுத்தடித்து அரிசியாக்கிதைதான்
அன்னமாக அவன் ஏற்கிறான்

நாங்கள் நெருக்கி நெய்த ஆடைகளைதான்
நிர்வாணம் மறைக்க உடம்பில் தரித்திருக்கின்றான்

நாங்கள் ஆழம் வெட்டிய கிணற்று நீரில்தான்
அனுதினம் அவன் அங்கம் குளிர்கிறான்

நாங்கள் கல்லுடைத்து கட்டிய மாளிகையில்தான்
கவலையின்றி கண் உறங்குகின்றான்

இப்படியாக
எங்கள் வியர்வையின் விளைச்சலை விருந்தாக ஏற்றவன்தான்
விலகிச் செல்கிறான் வீதி வலம் வருகையில்
"அவன் படைத்த எங்களை தீட்டென்று"

எழுதியவர் : மணி அமரன் (1-Jun-16, 10:53 pm)
Tanglish : kadavul
பார்வை : 650

மேலே