காக்கா கதை
2016 இல் தந்தை தன் 5 வயது மகனுக்கு சொல்லும் கதையும்..............
மகன் தந்தையை கேள்விக் கேட்டே படுத்தும் பாட்டும்
இரவு பொழுது.................
தந்தை : தம்பி இன்னும் தூங்கலையாப்பா ?
மகன் :அப்பா எனக்கு தூக்கம் வரல நீ எனக்கு ஒரு கதை சொல்றியாப்பா ?
தந்தை : இப்பவா...............
மகன் : ஆமாப்பா இப்பவே சொல்லு...............
தந்தை : சரி சொல்றன் கேளு.............ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்கலாம்...............
மகன் : ஒரு பாட்டி தான் இருந்தாங்கலாப்பா...............
தந்தை : @@@@@@@@..................
நிறையப்பேரு இருந்தாங்கப்பா ஆனா நான் ஒரு பாட்டிய பத்தி மட்டும் தான் சொல்றன்..........
மகன் : சரி சொல்லுப்பா................
தந்தை : அந்த பாட்டி ஒரு மரத்துக்கு அடியில உட்காந்து வடை சுட்டுட்டு இருந்தாங்லாம்
மகன் :டேடி ஒரு டௌட்டு...........
தந்தை : என்ன டௌட்டு கண்ணா..........
மகன் : பாட்டி ஏன்ப்பா வீட்டுல வட சுடாம மரத்துக்கு கீழ உட்காந்து சுட்டுச்சு , பாட்டிக்கு வீடு இல்லையாப்பா...............
தந்தை :பாட்டிக்கு வீடு இருக்குப்பா ஆனா காத்துக்காக மரத்ததுக்கு கீழ சுட்டுச்சு
கதைய கேளுப்பா.................
மகன் : சரிப்பா
தந்தை :அப்போ அங்க ஒரு காக்கா பாட்டி வட சுடுறத பாத்துச்சாம்
மகன் : அப்போ பாட்டி காக்காவ பாக்குலியாப்பா
தந்தை : @@@@@@@@@@டேய் வேணான்டா ஒழுங்கா கதையக் கேளு..................
மகன் :சரிப்பா சரிப்பா சொல்லு
தந்தை : அந்த காக்கா பாட்டி சுடுற வடைய எடுக்க நினச்சிச்சாம்.உடனே அங்கேர்ந்து பறந்து வந்து பாட்டி சுட்ட வடைய தூக்கிக்கிச்சாம்...................
மகன் : ஏன்ப்பா அம்மா சுடுற வட சுடுதுல அதேமாறிதான பாட்டி சுடுற வடையும் சுடும்...................
அப்போ காக்க வடைய தூக்குறப்ப வட சுடுலியாப்பா..................
தந்தை : (கொல்றானே..........) ஏன்டா நீயும் உங்கம்மா மாறி கேள்வி கேட்டே கொல்ற...............
மகன் : அதாப்பா .................ஸ்கூல்ல எங்க டீச்சர் சொன்னாங்க..............
யார் அதிகமா கேள்வி கேக்குறாங்களோ அவங்க தான் புத்திசாலி......................னு சொன்னாங்கப்பா.................
தந்தை : வேறென்ன சொன்னாங்க உன் டீச்சரு..................
மகன் : ஆமாப்பா அவங்க இன்னொன்னும் சொன்னாங்கப்பா.......................
தந்தை : என்ன................?
மகன் :கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாம மலுப்புறவங்க முழிக்கிறவங்க ஆன்சர் தெரியாதத மறக்கிறத்துக்காக திட்டுறவங்களுக்கெல்லாம்.................
தந்தை : திட்டுறவங்களுக்கெல்லாம்.............
என் ன சொல்லுடா
மகன் :அவங்களுக்லு எல்லாம் மண்டையில எதுமே இருக்காதான்ப்பா.................அப்போ உனக்குமா...................
தந்தை :@@@@@@@@@@@@@@