மேவிடும் அன்பே பாராய் என்னை

காதல் தேசியகொடியை அடித்தாய் நெஞ்சில்
பூவின் மொழிகளில் புதைந்தாய் பனியே
பனியாய் உருகும் மெழுகே வா வா...

மல்லிகை தோட்டமே
அவள் மடி சேர்ந்தாயா
பூக்களின் தேசமே
அவள் தேகம் கலந்தாயா
உடல் பொருள் ஆவி நீ தான் பெண்ணே
உயிர் மேவும் உன்னில் கண்ணே

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jun-16, 8:26 pm)
பார்வை : 113

மேலே