கடத்தப்படும் வரலாறு - 1

அசையாதே கிடந்ததன் பயனாம்
ஆண்டு பலகழிந்ததில் பிறந்ததாம்
தெய்வ மண்ணின் முற்பிறப்பாம்
பெயரோ கல்லாம், பாறையாம்.

வல்லவன் ஒருநாள் வந்தானாம்
இளைத்தவன் அவன்முன் பணிந்தானாம்
வல்லவன் தன்புகழ் நிலைநிறுத்த
பார்மிசை பல்பணி புரிந்தானாம்.

முதற்கட்டப் பணியில் எடுத்தானாம்
மண்கொண்டு செய்த செங்கல்லில்
தன்வலி காட்டத் திட்டமிட்டே
திருக்கோபுரத்தோடு பல கோயில்.

சிலநூறாண்டில் செங்கற்கோயில் வலுவிழந்ததாம்
காலத்தோடு போட்டியிட்டே பொழிவிழந்ததாம்
வல்லவன் ஒருவன் பார்த்தானாம்
கருங்கற்கொண்டே கோயில் செய்தானாம்.

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (8-Jun-16, 7:59 am)
பார்வை : 160

மேலே