நினைவுகளால் தொடர்வேன்

நினைவுகளால் தொடர்வேன்
நித்தம் நினைத்துக்
கொண்டே வாழ்வேன்...

நீ
சிரித்ததைச்
சித்திரமாக்குவேன்...

உந்தன்
அழுகையையும்
அழகாக்குவேன்...

உனதன்பை
எனக்குள் தினமும்
வரவு வைப்பேன்...

அதில் நொடிக்கும்
வட்டிகளை நான்
கூட்டுவேன்...

நீ என்னுடன் இருந்த நாட்கள் ஒவ்வொன்றையும் கொண்டாடும் விழாவாக்குவேன்...

நீ இல்லாத நாட்களுக்கு
கற்பனையை எனக்குள் விதையாக்குவேன்...

நீ தந்த முத்தங்களை
எண்ணி என்னை நானே புனிதமாக்குவேன்...

நீ தந்த வலிகளை
எண்ணியே என்னை வலிமையாக்குவேன்...

உந்தன் காதலை
எனக்குள் காமமும்
ஆக்குவேன்...

எந்தன் பசிக்குக்
காதலை இரையும்
ஆக்குவேன்...

நினைவுகளால் தொடர்வேன்...

எழுதியவர் : RajSaran (8-Jun-16, 12:54 pm)
சேர்த்தது : ராஜ் சரண்
பார்வை : 414

மேலே