ஜென்ம ஜென்மங்கள்

ஜென்ம ஜென்மங்கள்
சேர்ந்து
வாழத்தானே.....என்
வாழும் காலத்தின்
பாதியை
சேர்ந்து நாம்
தெய்வமே உன்
சந்நிதி சரணடைந்தோம்....!!

பொன்னான நம்
வாழ்வு.....
கண்ணாடி
துண்டுகளாய்....
கண்முன்னே
சிதறிப்போனதே.....
எதற்காக
இத்தனை வேதனை
முடிந்திடாத
வேதனை.....சூழ்ந்து
என்
இதய சுவர்களில்
விரிசல் கொண்டேன்.....!!

காதலிக்கும்
போது
கவிதை எனக்கு
வந்ததில்லை.....
இன்று
காதலிக்காக
கவி மட்டுமே
என்
ஆறுதல் என்றாகிப்
போனது.....அன்று
கேட்டாய்
எழுதவில்லை....இன்று
எழுதுகிறேன்
பார்க்காமலே.....நீ
என்னோடு
என் கவிகளும்
என்றென்றும்
காத்திருக்கும்.....!!

காத்திருந்து
காத்திருந்து
கண்ணீர் கலந்த
வாழ்வு....
என் காலங்களை
நனைத்துப்
போகிறது.....
யாருக்கும்
சொல்லிடமுடியாத
தனிமையின்
வாலிபக் கஷ்டங்களை
என் காலடியில்
போட்டுவிட்டு.....கும்பிட்ட
கடவுளையும்
குறிப்புகளை
வாங்கிக் கொள்ளும்
என் நாட்குறிப்பு
ஏடும்....அனதாரவாய்
சென்று
பல நாளாச்சு.....!!

துடுப்பாய் இருந்து
கரைகளை
காண்பிப்பேன்
என்று நான்
கண்ட
எண்ணங்கள்.....
வண்ணம் கலைந்து
என்
வாழ்வும்
தொலைந்தே
போச்சு.....இனி
எங்கே
வாழப்போகுது
என்
உயிர் மூச்சு.....????

நாளும்
பொழுதும்
உன் உன்நினைவுகள்
என்னோடு....
வாழும் போதே
வேதனைகள்
வேட்டுவைக்குதடி
என் நெஞ்சில்.....
உன்னைச் சுமக்கும்
இதயம்
தாங்குமோ
இதனை.....????
பொய் பேசும்
காதல் வார்த்தை
இல்லை..... இது
மெய்யில் கலந்த
என்னுயிர் நீயடி......
மறந்துவிடாதே......!!!!

மாலையிட்ட பின்பு
வாழ்வில்
கலப்போம்
என்றிருந்த
நினைப்பில்......
நேர்ந்த
அவலம்..... இப்படித்
தினமும்
நெருப்பில்
வாழவைத்து
விட்டதே
நம்மை.....!!!?!

உத்தமி உன்னை
இவ்வுலகமே
அழிந்தாலும்
ஒருபோதும்
மறக்கமாட்டேன்.....
இறந்தே
நான் போனாலும்
மறந்தே
போகாத
உன் விழிப் பார்வை
என்னை
உயிர்பிக்குமே.....!!

உன் காலைச்
சுற்றிய
கொலுசும்.....
ஆயிரம்
கதைகள் சொல்லும்.....
அழகிற்கு
அழகு செய்த
அந்த நிமிஷங்களை
நினைக்காத
நேரமில்லை.....அன்பின்
ஆழங்கள்
இன்னும்
நீளும்.....ஆயுள்
உள்ளவரை
என்னுள்ளே நீ
வாழ்வாய்.....
வாழவைப்பேன்.......இல்லையெனில்
என்
வாழ்வையே
தொலைப்பேன்......!!

எழுதியவர் : thampu (16-Jun-16, 2:39 pm)
பார்வை : 76

மேலே