உதிர்ந்தப் பூ
"காதலுடன் - பாகம் 14"
பூக்கள் தூவும்
நாளன்று
புயலொன்று வந்து
புழுதித் தூவிப் போனதே...
சித்தம் முழுதும்
பித்தம் ஆனதே......
கண்ணீரில்
சோகம் கரைத்திட
என்னால் முடியவில்லை...
மேகமாய் பொழியும்
பெற்றோரின்
கண்களைப் பார்த்து...
முயல்கிறேன்
என் சோகம் மறைத்திட
முடியவில்லையே......
விழிகள்
தூங்க நினைத்தாலும்
மனமோ?...
துயில மறுத்து
தூண்டில் மீன்களாய்
துடிக்குதே......
முந்தைய நாட்கள்
இரவுகள்
நுரைகளாய் உடைந்தன...
இன்றைய நாள்
கடலின் தீரமாய் நீளுகிறதே......
தீராத
காதல் தாகத்தில்
நீருக்குள் மூழ்கிக் கொண்டே
நீரைக் குடிக்கவும் முடியாது
மறுக்கவும் முடியாது
தவிக்கிறேன்......