உனக்காக ஒரு கவி
கவிதைகளாய் எழுத தெரியவில்லை
உன் அன்புகளை.
காதலால் மிஞ்ச முடியவில்லை
உன் கவிதைகளை.
கண்களினால் கற்பித்து
இதயம் நுழைந்து
குடி கொண்டவனே
இன்னும் ஒரு முறை
வாராதோ கவிதைகள்
நெஞ்சில்
காதல் தேச இளவரசியாய்
மாற்றி எங்கு சென்றயோ?
உனக்கான கவிதைகள்
வார்க்கப்படும் முன்னே
மை இல்லா பேனாவை
கையில் திணித்தவன்
நீ தான்.
தேடுகிறேன் தேடுகிறேன்
இன்றளவும்
எதுவும்
உனக்கானவை அன்று.
நன் எழுதிய கவிகள்
உன் போல அல்ல.
உன்னை போலவே தமிழும்
தேடும் போது
வார்த்தை கிடைப்பதில்லை.
கொஞ்சம் கொஞ்சம்
கவி எழுத முற்பட்டேன்
பிள்ளையார் சுழி உடனே
முடிந்து விடுகிறது
உன்னை நினைக்கையில் மட்டும்.
கற்பனைகளுக்கு எட்டா
படைப்பு ஒன்று உண்டு எனில்
அது நீயும் உன் காதலும்
ஒரு நாளிலும்
கவிதைகள்
எழுதமுடியாமல்
போனால் ,
என் வாழ்நாளின்
தீரா ஆசையாக
அது என்னை அரிக்கும்
அதற்காக மன்னித்துவிடு
கவி தேடும் முயற்சியில்
இதோ இறங்குகிறேன்
.