நினைவில் என் தந்தையே

என் விழியெல்லாம்.....
வழியெங்கும் சுற்றி சுற்றி பாய்ந்தது...
இத்தனை நாள் தெரியவில்லை..
எனக்கு....
இதயம் துடியாய் துடிக்கிறது இந்த நொடி...
கவலையேதும் இல்லை என்னுள்...
கண்ணீர் எட்டி பார்ப்பது ஏன்...
என்னை விட்டு நீ பிரிந்து சென்றாய்..
எண்ணங்களாய் என்னுள் கலந்துவிட்டாய்...
உதடசைத்து அழைத்திட என்னருகில் நீயில்லை....
உறவாய் நீ தந்த பாசம் என்னருகே..
கனவெல்லாம் நீ தந்த நேசம்....
நினைவெல்லாம் உன் முகம் தான்.
வேதனை என்னுள் நீ தந்ததில்லை..
வேதனையாய் நானும் உன்னில் இருந்ததில்லை...
தந்தையே |
எந்நொடியும் உன் நினைவோடு நான்...

எழுதியவர் : (20-Jun-16, 10:27 am)
பார்வை : 52

மேலே