ஓவியத் தனிமை

அடைமழையில் கதவிரண்டைத் திறந்து வைக்கிறேன்
அதில்நனைய ஆசைதனை அனுப்பி வைக்கிறேன்
அடியெடுத்துப் பாதங்களை மெல்ல வைக்கிறேன்
அடஇதுதான் காதலென்று எழுதி வைக்கிறேன்

தட்டெடுத்தேன் அன்னமிட்டுத் தயிரை மறந்தேன்
தாவணிக்குத் தோதான இரவிக்கை மறந்தேன்
தலைவாரிக் கூந்தலிட்டேன் பூவை மறந்தேன்
தனிமையில்நான் என்பதையும் பூவை மறந்தேன்

சாயுங்கால வேளைவந்தால் வெறுப்பு ஏனடி
சாளரத்துக் காற்றினிலும் வேர்ப்பதேனடி
சாலையோரம் விழுந்தபார்வை உறைந்ததேனடி
சண்டித்தனம் செய்யுதெந்தன் பொறுமைதானடி

#மணிமீ
12-ஜூன்-16

எழுதியவர் : மீ.மணிகண்டன் (23-Jun-16, 10:45 am)
பார்வை : 118

மேலே