அடியே காவேரி நீ •••

1. - அடியே காவேரி நீ யாருக்குடீ சொந்தம்••!

2. - ஐயோ ஐயோ என்னப்பாத்து என்ன கேள்வி கேட்டீங்க•••!

1. - கேட்ட கேள்விக்கு பதில் சும்மா குய்யோ முறையோன்னு கத்தக்கூடாது!

2. - நாங்க பத்து பேர்ல நானும் ஒருத்தி !

1. - யார் யார் அந்த பத்து பேர் !

2. - சொல்றேன் எண்ணிக்கோ ஒன்னு கங்கா இரண்டு சிந்துங்கிற இந்து மூனு பிரம்ம புத்திரா நாலு யமுனா ஐந்து நர்மதா ஆறு தப்தி ஏழு கோதாவரி எட்டு கிரிஷ்ணா ஒன்பதாவது நானு காவேரி பத்தாவது மஹாநதி !

1. - ஆமாம் நீங்க எல்லாம் இந்த தேசத்துக்கு சொந்தமா இல்ல மாநிலத்துக்கு சொந்தமா •••?

2. - உண்மையா சொல்லப்போனா நாங்க எல்லாரும் தேசத்துக்கு தான் சொந்தம்

1. - அப்புறம் எப்படிடீ மத்தவங்க எல்லாம் உங்கள காவேரி எங்களுக்கு சொந்தம் கோதாவரி எங்களுக்கு சொந்தம் கிரிஷ்ணா எங்களுக்கு சொந்தமுன்னு எப்படி சொந்தம் கொண்டாடலாம்

2. - என்னக் கேட்டா எனக்கென்னத் தெறியும் எங்க போயி கேக்கனுமோ
அங்க போயி கேட்டா அதுக்கு உண்டான பதில் கெடைச்சிட்டு போவுது
கேக்க வேண்டியவங்க மூலையில போய் பதுங்கினா எப்படி பதில் கெடைக்கும் !

1. - சரி இரு உன்ன வந்து வச்சிக்கிறேன் !

2. - மாமோய் நான் தேசத்துக்காரி என்னய உன்னாலேயும் வேற யாராலேயும் வச்சிக்க முடியாது மாமோய்

1. -•••••••••••••••!!!!

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி மும (23-Jun-16, 1:24 pm)
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே