அழகிய தமிழ் மகள்
அதிகாலை நேரம்
மேகக்கதவுகளை ஆதவன்
கரம் கொண்டு திறக்கும் நேரம்
பறைவைகளும் பூக்களும்
சிறகு விரிக்க தொடங்கும் வேலை
என் விழிகள் மூலம்
அந்த அழகான விபத்திர்க்குள்ளானேன்
அதிகாலை பனி
ஆதவன் வந்தவுடன்
இழையிலிருந்து வழிவது போல்
அவள் கூந்தலிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது
இரு மலைகளுக்கு மத்திளிருக்கும் சூரியன் போல்
அவள் புருவங்களுக்கு மத்திளிருக்கும் குங்குமம்
வெண் பாலில் மிதக்கும் கருந்திராட்சை
அவள் இரு கண்கள்
சிவப்பு ரோஜா இதழ்கள்
சிறைபட்டிருக்கும் இடம் அவளின் உதடு
சிற்பிக்குள் இருக்கும் முத்துக்கள்
அவளின் பற்கள்
வானவில்லை வளைத்து
உடையாக உடுத்திருந்தாள்
நான் நானாக இருந்தேன்
அவள் பார்வை என் மீது படும் வரை
புருவத்தை வில்லாக்கி
விழி ஐ அம்பாக்கி என்னை
வீழ்த்திவிட்டால்
சிரிப்பு என்னும்
சுழலில் என்னை
சுழல விட்டால்
புருவம் என்ற வாளால் என்
இதயத்தை கொன்று
உதடுகள் வழியாக என்
உயிரை உறிஞ்சி
கண்கள் மூலம் என்னை
களவாடி விட்டால்
அழகிய தமிழ் மகள்