புகையே சிகையென விரித்து

தேடி தோண்டினாலும் கிடைக்காத,
புதையல் கிடைத்ததே, உன் புன்னகையில்...
தீயே தீண்டினாலும் கிடைக்காத,
வெப்பம் கிடைத்ததே, உன் நிழலில்...

இறையே வேண்டினாலும் கிட்டாத வரமே... இமை
சிறையே மூடினாலும் கிடைக்கும் உன் முகமே...

உன் இமைகளை குறுக்கி.., இதழ்களை விரித்தாய்...
என் இதயம் நொறுங்க.., ஏனடி சிரித்தாய்...

கரும்புகையே தன் சிகையென விரித்து,
தனியே செல்லும் புகைவண்டிக்கு,
துணையாய் செல்லும்... தட தடவெனும் ஓசை...
அதுபோல்...
என் பயணத்தில் நீ வர.., எனக்கோர் ஆசை...

உன்னருகே நான் உருகிய நிமிடங்கள்,
என்னுள் உறைந்து போனதடி...

எழுதியவர் : சாய நதி (3-Jul-16, 1:28 pm)
பார்வை : 115

மேலே