கூத்தாடிகள்
*
நெடுநாள் வாழ்ந்ததின் அர்த்தம் சூன்யம்
நொடியில் உணர்த்தி விடுகிறது மரணம்
*
கழைக்கூத்தை வேடிக்கைப் பார்க்கிறார்கள்
மன வக்கிரக் கூத்தாடிகள்.
*
வெண்டைப்பூ கொண்டை ஏறாது
சண்டைகோழி சமாதானம் ஆகாது.
*
அலட்சியம் வாழ்வை வீழ்த்தும்.
இலட்சியம் வாழ்வை உயர்த்தும்
*
கருணை மனம் தேட வேண்டியிருக்கிறது
மனிதம் பொறுமை இழந்து வருகிறது
ந.க.துறைவன்.