இறைவனை அறிகின்றோம்•••
இன்பம் என்றவன்
இன்முகம் காட்டினான் ஆனால்
இறைவனை காட்டவில்லை
இன்னல் என்றவன்
இடர்பட வாட்டினான் ஆனால்
இறைவனை காட்டினான்
எங்கனம்
இன்னல் வரும்போது
இளகிடும் நம்மாலே
ஈடேற இயலாமல்
இறைவா என இறைஞ்சுவோம்
மெய்மறந்து வாய்விட்டு கதறி
இறைவா என்றழைக்கிறோம்
அல்லவா
மகனேயென நமக்காய்
ஆவிதுடிக்கிறான் தாவி
அணைக்கின்றான் நாமோ
இன்னல் மறக்கின்றோம்
இறைவனை அறிகின்றோம்
இல்லையா