தந்திர உ றவுகள்

தந்திர உறவுகள்

பாரத துரோகிகளின் துணைகொண்டு
தமிழனை கொன்று குவிக்கிறான்
தமிழ் ஈழத்திலே ….

இந்த நரக வேதனைக்கு
துதிபாடும் திராவிட சண்டாளக்கூட்டம்
நடத்துவது தேர்தல் கதக்கலி விபச்சாரம்
தொப்புல் கொடி உறவுகள் துடிதுடிக்க !

நிலவுக்கு கையேந்தும் ஆந்தைக்கு
சம உரிமை கோரும் ஐ நா
போர் குற்ற அவல நிவாரணம் பரிந்துரைக்கா ..
மாறாக அது போடுவது ஒரு கும்பீடு …!

சதிகார இராவணன்
தேரின் அச்சானியை பிடுங்கிட
கச்சாமி சிங்கள கவிராயர்
ராஜ தந்திர உறவுகள் வெழுத்துக்கட்ட
துயர் கோலம் கண்டது
முள்ளிவாய் தமிழன் குருதி வெள்ளப் பெருக்காய் ஓடிட !

இன்று
ராமேஸ்வரத்தில் மீனவனுக்கு பீதி
வல்லரசு என்று மார் தட்டும்
வடக்கு நில பேமானி பிதற்றுவது
நடுவன் அரசு என்னுடையது
இப்போ
எதற்கு உமக்கு வீண் வம்பு !

அங்கு காவியுடைகுள்ளே கையெரி குண்டு பதுக்கி
போராளிகளை களையெடுக்கிறது
அவன் இனம் ஆனந்தக்கண்ணீர் வடிக்க !
இதனாலேதான் புத்தனை நாடு கடத்தினேன்
கண் மூடி கல்லாய் தூங்கிவழிய !

இனி எதையும் பரிந்துரைக்காதே ..
காரணம்
குருட்டு பார்வையும் காதடைப்பும்
உடனே வந்துவிடும் எனக்கு
தமிழ் நாட்டில் முகவரியை தொலைத்த
தமிழனைக் கண்டால் !

எழுதியவர் : (11-Jul-16, 3:33 pm)
பார்வை : 120

மேலே