புரியாத புதிர்தான் நீ

காதல் மலர்ந்து காலம் கடந்தும்
புதிர்களின் புதையலாகவே
பரிணமிக்கிறாய் நீ !!!!

பழகி காலங்களும்
பதில் தராத மௌனங்களும்
என்னுள் எத்தனையோ கேள்விக்கணைகளை
இன்றைக்கும் எழுப்பியவாரே.............

உள்ளொன்றும் புறமொன்றும்
உதிர்த்த உதடுகளில் -
சாயங்களின் நிறம் மாறுவதை
அனுபவத்தில் இன்றே உணர்கிறேன் ...........

ஆசையாய் காத்திருந்த
அந்த இடங்களை கடக்கின்ற நேரங்களில்
இதயத்தின் வலி சற்று
அதிகமாகத்தான் செய்கிறது ............

பொய்யாய் உதிர்த்த
புன்னைகையின் பொய் முறுவலில்
சிக்கி சின்னாபின்னமாகி
மீளாமல் தவிக்கிறது சிந்தனை !!!!!!

காலத்தின் ஓட்டத்தில்
எதிர்காலம் வரை கடந்திருந்த
எல்லா ஆசைகளையும்
நிராசை ஆக்கிவிட்டாய் நீ !!!!!!!!!

நேசத்தின் ஆழத்தை
அறிய முயன்ற அத்தனை முயற்சிகளுமே
என்னை பொறுத்தவரையில்
தோல்விகளைத்தான் சந்தித்திருக்கின்றன !!!!!!!!!

கருணையை தேடி
கண்கள் உதிர்த்த கண்ணீரும்கூட -
உன்மனம் கல்லென்று பின்பே
புரிந்துகொண்டது .............

நேசிப்பதாய் நீ சொன்ன பொய்களைக்கூட
உண்மையென நம்பி
உருகிக்கொண்டிருக்கிறது உள்ளம்
இன்றுவரையில் .............

இருந்தும்
காதலின் கரிசனமில்லாத
கரடுமுரடான காட்டின் ராணியாவே நீ !!!!!!

எழுதியவர் : விநாயகமுருகன் (17-Jul-16, 8:00 pm)
பார்வை : 467

மேலே