உந்தன் நியாபகத்தில்

காதலிக்க கற்றுக்கொண்டவுடன்
கடிதங்களுக்காக காத்திருக்கிறேன்
கடிகார முள்பார்த்து !!!!!!!!!!!

கற்றுக்குட்டி கவிஞனாகி
வீட்டில் எங்குமே
காகித குப்பைதான் !

எழுத வராத கற்பனைகளை
கண்டித்து எத்தனையோ
பேனாக்கள் உடைந்ததுதான் மிச்சம் !!!!

ஒவ்வொரு நாளும்
உன்னை ஓவியமாய் வரைந்து பார்த்து
சுவர்களும் கூட நிறம் மாற்றிக்கொண்டது -
இதுவும் உண்மை !!!!!!

தனிமையும் இனிமையாகி
எந்தன் நினைவுகளை
என்றோ துளைத்துவிட்டேன் -
எங்கோ துளைத்துவிட்டேன் !!!!!!!!

கால்கடுக்க காத்திருந்தும்
உன் வருகைக்கான வரவேற்பில்
வஞ்சகம் வைத்ததில்லை -
என்றைக்குமே பொய்யான புன்னகைப்பில் !!!!!

விரல்தொடும் தூரத்தில்
நீ இருந்தும்
உன் சுவாசத்தை சுவாசிப்பதும் கூட
சுகமாகத்தான் இருக்கிறது !!!!!!!!

எவர் எவரோ வைத்து சென்ற
எல்லா கல்யாண மடல்களிலும்
பெயர் மாற்றி பார்ப்பதும்கூட பேரானந்தமே!!!!

கவிஞர் சுந்தர விநாயகமுருகன்

எழுதியவர் : விநாயகமுருகன் (17-Jul-16, 9:06 pm)
பார்வை : 103

மேலே