அடைக்கலம் நீயே•••
ஆயிரம் கோள்கள்
பிறந்து வந்தாலும்
ஆகாயம் ஒன்று தான் !
ஆயிரம் மதங்கள்
பிறந்து வந்தாலும்
ஆண்டவன் ஒருவனே !
ஆயிரம் சாதிகள்
பிறந்து வந்தாலும்
ஆண்பெண் இரண்டே !
ஆயிரம் ஆடவர்
அணி திரண்டாலும்
ஒருத்திக்கு ஒருவனே !
ஆயிரம் பேர்க்கூடி
அறிவுரை கூறிடினும்
அடைக்கலம் நீயே
ஆண்டவனே நீயே !