வாழ்க்கையின் தூரங்கள்••
ஓடுகிற ஓட்டத்திலே
புழுதி எழுந்து மேல் படிய
ஒரு வருக் கொருவர்
அடையாளம் தெரியாமல்
தேவையை தேடுகின்றனர் !
"வாழ்க்கையின் தூரங்கள்"
மனதுக்கு தரும் பாரங்கள்
நனையும் நயண ஓரங்கள்
ஆகாவிட்டால் கோரங்கள்!
பீடித்திருக்கிற சோகங்கள்
நழுவிடும் நல்ல நேரங்கள்
பாடாய் படுத்தும் பாவங்கள்
ஏறி முடியாச் சிகரங்கள்!
வாங்கி வந்த வரங்கள் இது
வாழவைக்கும் நகரங்கள்
வாட்டுகிறது நரகங்கள்
வாழ்க்கையின் துயரங்கள்!
வாழ்க்கை அரங்கங்கள்
வழங்கப்பட்ட சாரங்கள்
யாருக்குண்டோ தீரங்கள் ஆசைகளோ அபாரங்கள்!
உடலிலே எண்ணெய் பூசி
தெருத்தெருவாய் படுத்துப் புறண்டாலும் உடம்பில்
ஒட்டும் மண்ணே ஒட்டும்!
என்கின்ற தத்துவ மதனை
கற்பித்ததிந்த வாசகங்களை "வாழ்க்கையின் தூரங்கள்"