தனிமையின் கொடுமை
தனிமை எனும் நரகத்திலே - தினம்
தவித்துக் கொண்டு இருக்கையிலே ...!
இனிமை எனும் சொர்க்கத்தினை
அறிமுகம் செய்த என் துணையே!
நொடிப் பொழுது உன்னைப் பிரிந்தால் வாழ்வேனோ?
உன் நினைப்பில் இருந்து சாவேனோ?!
அன்பே என் அறிவே!
எங்கே என்னுயிரே ?!
தொலைத்தேன் உன்னிடம்
இன்பம் வந்து தந்திடு தினம் தினம்...!
உன் அன்பு வலையில்
இன்று சிக்கித் தவிக்கிறேன்...
தனிமையின் கொடுமையில்!