காதலை சொல்லிட

உறங்காத விழிகளில்
வாழும் காதலே
உணர்வுகளுக்குள் நீந்தி
இம்சைசெய்யும் காதலே

நினைவுகளின் நாதம்
நொடிகளுக்குள்
விட்டு விட்டு கேட்கிறது
காதல் வாசத்தை

சொல்லாத காதலை
சொல்லிட என் வீட்டு
றோஜாக்கூட்டம்
அனுமதி கேட்கின்றது.

வெறுப்பை காட்டி
திட்டிய மனது
அன்பை அள்ளி வீச
என்னவனை தேடுகின்றது.

காதலுக்காக சமூகத்தின்
வேற்றுமைகளை களைந்து
காதலிக்காக சிகரம்
தொட்ட சாதனையாளன்!

அவன் தரிசனம் வேண்டி
கண்களும் கனவுகளை
யாசிக்கின்றன ..ஒத்திகைகள்
அரங்கேறி பூக்கள் சிரிக்கின்றன.

இனியும் மறைக்க
வயதுக்கும் பொறுமையில்லை
வந்துவிடு பூங்காற்றே
காதலை சமர்ப்பணம் செய்ய,,,

எழுதியவர் : பச்சைப்பனிமலர் (21-Jul-16, 10:56 pm)
Tanglish : kaadhalai sollida
பார்வை : 70

மேலே