புன்னகைப் பூந்தோட்ட மாய்
கதிர்விரியும் காலைப் பொழுதின் புதுமை
மலர்கள் இதழ்விரிக்கும் வண்ணப்பூந் தோட்டம்
இனிமையில் தென்றலும் மெல்ல நடந்துவர
புன்னகைப் பூந்தோட்ட மாய்நீயும் வந்தாய்
விரியுதடி என்னுள் ஒருநீல வான்தோட்டம்
வானவில் வண்ணங் களில் !
-----கவின் சாரலன்
பஃ றோடை வெண்பா ( றோடை ஒற்றைக் கொம்பு ற கரமாகப் படிக்கவும் )
Q வில் அக்கன்னா வருவதில்லை . சொற்கள் சாய்சில் சிக்கல்கள் .முன்னுள்ள
முறையில் அமைவதே நன்று . எழுத்துக் குழு கவனிக்க