அவளிடம் தந்தானோ
துயர் வரும்போது
எதிர் கொள்ளாது
உறவு துறந்து
துறவியாக மாறி
நழுவும் ஆணினம்
எந்த இடரையும்
எதிர்த்து போராடி
தன் உயிரோடு
தன் வழி உயிரையும்
காத்திடும் பெண்ணினம்
கடவுளும்
கைவிட்டால்
கூண்டோடு
செத்து மடியும் பெண்மை
போற்றத்தக்கது
மண்ணில்
பெண்ணினம்
இல்லையென்றால்
உலகேது
உயிரேது?
அதனால் தானோ
இறைவன் தாயை படைத்து
முத்தெய்வங்களின்
முழுப் பணிகளையும்
அவளிடம் தந்தானோ!