தினம் ஒரு கவிதை
அன்னை பற்றி எழுத
ஆயிரம் அன்பு நிகழ்வுகள் உண்டு
நிலவு பற்றி எழுத
நீண்ட நித்திரை நினைவுகள் உண்டு
மலர்கள் பற்றி எழுத
மணம் வீசும் நெகிழ்ச்சிகள் உண்டு
பறவைகள் பற்றி எழுத
பரவசமூட்டும் நிகழ்ச்சிகள் உண்டு
சமுதாயம் பற்றி எழுத
சலிக்கவைக்கும் சரித்திரங்கள் உண்டு
காதல் பற்றி எழுத
காலம் தந்த காயங்கள் உண்டு
நட்பை பற்றி எழுத
நல்வரின் நல்லசெயல்கள் உண்டு
தமிழை பற்றி எழுத
தலைமுறையின் தடங்கல் உண்டு
இயற்கை பற்றி எழுத
இதயம் தொட்ட இனிமைகள் உண்டு
கடல் பற்றி எழுத
கால் நனைத்த காலங்கள் உண்டு
கவிதை பற்றி எழுத
கசக்கிய காகித கிறுக்கல்கள் உண்டு
மழை பற்றி எழுத
மழலையாய் மாற்றிய மாயங்கள் உண்டு
தினம் ஒரு கவிதை எழுத
பல தலைப்புகள் கிடக்கிறது
தினம் ஒரு கதையை சொல்லி
என் சோம்பேறித்தனம் தான் தடுக்கிறது ...!