அச்சம் தவிர்

அச்சம் எனும் பகைவனை
தீயிட்டு கொழுத்து...
தமிழனின் முன்னேற்ற
பாதையின் தடைகளில்
முதன்மை அச்சம்...

அச்சம் கொண்டவன்
எதையும் செய்து முடிக்க
இயலாது...
எதிலும் அச்சம்
எல்லாவற்றிக்கும் அச்சம்
வீட்டை விட்டு வெளியே
வர அச்சம்...

அச்சம் உடையவன்
உடமை இழப்பான்
பொருள் இழப்பான்
வாழ்வையே இழப்பான்...
நரக வாழ்க்கை வாழ்வான்
பூமியில்...

எழுதியவர் : பவநி (7-Aug-16, 6:52 am)
Tanglish : achcham TAVIR
பார்வை : 733

மேலே