மறந்தே தூங்குகிறான்

மறந்தே தூங்குகிறான்!!
*****************************

துயிலெழுந்த கதிரவனும்
தன் கடமைக்காய்
கீழ் வானில்
தன் கடை திறந்தே
மஞ்சள் ஔி தௌித்துவிட்டான்!!

மரக் கிளை தனிலெ
மறந்தே துயின்ற பட்சிகளும்
ஒலி எழுப்பி
ஆராவாரம் செய்தே
இரைக்காய் சிறகடிக்கின்றன!!

பாவம் இவன் மட்டும்
இறை பணியவும் மறந்தே
போர்வைக்குள் சுகம் காண
தன் சுமை மறந்தே
அயர்ந்தே தூங்குகிறான்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (7-Aug-16, 7:37 am)
பார்வை : 102

மேலே