இறுதியில்
உங்கள் நம்பிக்கைகளையும்
அவர்கள் கடவுள்களையும்
ஒரே நேரத்தில்
விலக்கி வைத்து விடுங்கள்
உங்கள் சித்தாந்தங்களையும்
அவர்கள் வேதாந்தங்களையும்
ஒரே நேரத்தில்
விலக்கி வைத்து விடுங்கள்
உங்களை கடவுள் என்று
கூறிக் கொள்ளுங்கள்
அவர்களை சாத்தான்கள்
என்று அழைத்துக் கொள்ளுங்கள்
இறுதியில்
அவர்களை நீங்களும்
உங்களை அவர்களும்
மனிதர்கள் என்று
அழைப்பதை..
நினைப்பதை..
மட்டும்
தடை செய்து விடாதீர்கள் !