வாடா மலர்
மணம் இருந்தால் மட்டும் அல்ல
மனம் இருந்தாலும் போதும் நீ மலர் தான்
மணவாளன் மடிந்தால் உன் மனமோ அல்லது மணமோ
அழிந்ததாய் அர்த்தம் அன்று..!!!
நீ என்றுமே மலரே
இன்றைய மனிதன்
உன் மனம் அறியாமலிருக்கிறான்
பெண்ணே
நாளை உனக்கான விடியல் பிறக்கவிருக்கிறது
என்பதை மனதில் கொள்.
உன் மணாளனுடன்
நானிலம் போற்ற நல்வாழ்வு பெறுவாய்...!!!
இளைஞனே,
பிறர் இகழ்வார் எனும் எண்ணத்தை தவிர்த்திடு...!!!
நால்வருக்காய் வாழ்வதை விடுத்திடு...!!!
விதவை மறுமணத்தின் விதையாய் முளைத்திடு...!!!