லவ்த்திரம் பழகு

உன் மேல் காதல்
அரும்புதடா...!
உன்னுடன் வாழ்ந்திட
விரும்புதடா...!

பேதையை போல் மனம்
குழம்புதடா...!
சீதையைப் போல் தினம்
புலம்புதடா...!

இதழ்களால் என்னை
நனைத்திடடா...!
இருகரம் கொண்டெனை
அணைத்திடடா...!

முற்களைப் போல் உன்
மீசையடா...!
உன் மார்பினிள் சாய்ந்திட
ஆசையடா...!

உன் விழிகளில் காதல்
வழியுதடா...!
என் இதயம் இரண்டாய்
கிழியுதடா...!

எனை ஒரு முறையாவது
நோக்கிவிடு...!
உன் இரு விழியால்
எனை தாக்கிவிடு...!

இத்துடன் இக்கவி
முற்றுபெரும்...!
இக்கவி காதலை
கற்றுதரும்...

எழுதியவர் : அகத்தியா (12-Aug-16, 1:59 am)
பார்வை : 88

மேலே