பெண்ணின் ஏக்கம் - பாடல்

மொட்டுக்குள் தேனாகத் துயிலும் என்
மோகத்தில் தீ சேர்ந்தது
கட்டுக்குள் அடங்காத உணர்வோடு என்
பெண்மை பூ பூத்தது
மன மொட்டுக்குள் தேனாகத் துயிலும் என்
மோகத்தில் தீ சேர்ந்தது
*****

செந்தூரம் இல்லாத வாழ்வை
ச்சீ என்றே ஊர் சொல்லுது
சந்தோசம் கொள்ளாத இளமையை
சா என்றேன் அது என்னைக் கொல்லுது
துயர் விரகம்....
உயிர் நரகம்....
கண்ணீரில் நான் வாழும் வாழ்வை
காலங்கள் மாற்றாத துயர்.. மொட்டுக்குள்
*****
பொட்டோடு பூச்சூடும் காலம்
பூக்கட்டும் என் வாழ்விலும்..
கும்பிட்டே கைகூப்பி தெய்வத்தை
கொஞ்சித்தான் கைசேரும் ஒருவன்
அன்புக்காய்...
அன்புக்காய்...
என்றென்றும் நான்செய்தேன் தவமே
என்றாலும் ஏனில்லை வரம். துயர்.மொட்டுக்குள் ..
*****
ஏழ்மை என் நல் வாழ்வில் வந்து
ஏமாற்றம் செய்கின்றது
மாலைக்கு பூவாங்க பணமது
கேட்கின்ற கைக்கூலி தனையே
நான் கொடுத்து...
மணம் முடித்து...
கரைசேர துடிக்கின்ற வயதினில்
நரைபோடும் முதிர்கன்னி எந்தன்
மன மொட்டுக்குள் தேனாகத் துயிலும் என்
மோகத்தில் தீ சேர்ந்தது
*****
*மெய்யன் நடராஜ்

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது பாடல் மெட்டில்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Aug-16, 1:51 am)
பார்வை : 335

மேலே